படைப்பாளிகள் என்ற போர்வை மீது சமீபகால அபத்தங்களால் பெருமளவு கோபம் இருந்தது..
யாதெனில் அவர்கள் தங்களை மட்டுமே இந்த உலகில் வாழ தகுதியானவர்களாக எண்ணிக்கொண்டு காட்டிய பகட்டு..
ஆனாலும் ஆண்டுகள் கடந்தாலும் ஆயிரம் நடந்தாலும், மறு சந்திப்பு ஒன்றில் நம் பால்ய காதல் ஒன்றை “நித்யாவ பாத்தேன் மச்சான்” என்ற ஒற்றை வரியில் நம்முன் நிறுத்தும் நண்பனை போலானது செல்வராகவனின் இந்த நேர்காணல்..
எதற்கும் அலட்டிக்கொள்ளாத பதில்..
எதுகுறித்தும் தீர்க்கமான பார்வை..
அவமானங்கள் நிறைந்த இறந்தகாலம்..
இப்படியெல்லாம் பக்கங்களை நிரப்பி, அபத்தங்கள் குதப்பி அடுக்காத ஒரு நிதர்சன நேர்காணல்..
ஏனென்றால் கேட்பவர் யாராயிருப்பினும் பதில் வரும் திசையில் கேள்விக்கான வீரியம் அறிந்து ஒளி அளந்து படரும் என்பது போலான நேர்காணல்..
(செல்வாவிடம் கேட்க (கற்றுக்கொள்ள) இருப்பது இன்னும் ஏராளம்)
எந்த இடத்திலும் இதுதான் நான் என்ற உத்தரவு தொணி தெறிக்காமல், இவைதான் நான் கண்டவை, கற்றவை என்ற சராசரியாளன் பார்வை, பதில்..
அதுதான் செல்வராகவன்..
இதில் எடுத்துக்கொள்ளலாம் எதற்குமான பதில்..
சரிவர ஆங்கிலம் தெரியாத என் மொழியில் சொல்லப்போனால்,
“This interview is not completed”
“Ideology”
இந்த வார்த்தை எனக்கு துளியும் பரிச்சையமில்லாத ஒன்று, ஆனாலும் முதன்முதலில் இந்த வார்த்தையை நான் கற்றுக்கொண்டது ஒரு படைப்பாளியின் படைப்பை பார்வையாளனாய் நம் பார்வையில் எடுத்துரைப்பது என கொள்ளலாம்..
செல்வராகவன் படைப்புகள் குறித்த ஆயிரம் ஐடியாலஜிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்க, அவற்றை அலசிய பின்னான இந்த நிதர்சன நேர்காணல் ஒரு பிரசாதம்..
ஒவ்வொரு பதிலும் அத்துனை பாமரம், அத்துனை ஆழம், அத்துனை சாமானியம், அத்துனை பாலபாடம்..
யுவன் குறித்த கேள்வி, நாமு அண்ணன் குறித்த கேள்விக்கான பதில்கள் ஒரு சோறு பதம்..
காதல் குறித்த பதில் பொட்டில் அறையும் உண்மை..
சமீபமாய் படைப்பாளி என்ற முகாந்திரம் பெரும்பாலும் பாகுபாடு கலந்தே நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது..
நான் இப்படியான சிந்தனையாளன், என்னை இப்படியாக சிந்திக்கவிட்டால் மட்டுமே இப்படியான படைப்புகள் தருவிப்பேன் என்பது போலானவை.. ஆனால் அதை உடைத்த ‘அண்ணன்’.. உனக்கானதை இப்படியாக முன்னெடு என்றுரைத்த சக மனிதன் செல்வராகவன்..
உண்மையில் யுகத்துக்கான படைப்பாளன் செல்வராகவன்.. 🙏